வட்டாட்சியர் அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு
வட்டாட்சியர் அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரம் மின்வெட்டு;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஏற்பட்ட மின்வெட்டினால் அனைத்து சேவைகள் முடக்கம். இதனால் சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதிகளான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாததால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு உடனே தரத்தை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.