அரியலூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கரூர் விஜய் பிரச்சாரத்தின் போது உயிரிழந்த 41 பேரின் உருவப் படத்தை வைத்து மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது உயிரிழந்த 41 பேரின் உருவப்படத்தை வைத்து சிபிஎம் கட்சியினர் அஞ்சலி.;
அரியலூர், செப்.30- அரியலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அரியலூர் மாவட்ட கலெக்டர் எதிரே பஸ் நிறுத்தத்தில் கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் உயிரிழுந்த 41 பேரின் உருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணா, மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் சிலம்பரசன், கனிமொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். .