தனியார் வங்கி ஊழியர் வங்கி மேலாளரிடம் ஆன்லைன் வர்த்தகம் ஆசைக் காட்டி ரூ.46.90 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் கைது
தனியார் வங்கி ஊழியர் வங்கி மேலாளரிடம் ஆன்லைன் வர்த்தகம் ஆசைக் காட்டி ரூ.46.90 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.;
அரியலூர்,அக். 6- அரியலூர் அருகே தனியார் வங்கி மேலாளரிடம் ஆன்லை வர்த்தகம் ஆசைக்காட்டி ரூ.46.90 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கனையார் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர். தற்போது அரியலூரிலுள்ள ஒரு தனியார் வங்கி ஒன்றில் கிளை மேலாளராக பணியாற்றி வரும் இவர், தனக்கு கூகுளில் வந்த லிங்கை தொட்டு ஒரு டிரேடிங் குழுவில் இணைந்துள்ளார். இக்குழுவிலுள்ள அட்மின்கள் 500% லாபம் பெறலாம் எனக் கூறி அறிவுரைகள் வழங்கியதையடுத்து, அவர்கள் கூறியபடி தனது கைப்பேசியில் டதஉஙஒஐல என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டார். அதன் மூலம் முதலில் கிடைத்த ரூ.3.45 லட்சத்தை தனது வங்கிக் கணக்கின் மூலமாக எடுத்துள்ளார். மேலும், அதிக லாபம் பெறலாம் என பல்வேறு தவணைகளாக அவர்கள் சொன்ன வங்கி கணக்கில் ரூ.46.90 லட்சத்தை செலுத்தி உள்ளார். இதனால் அந்த செயலிலியின் வாலட்டில் ரூ.25 கோடி பணம் சேர்ந்துள்ளது.இதையடுத்து ராஜசேகர் அந்த பணத்தை எடுக்க முயற்சி செய்த போது 2 சதவீதம் சேவை கட்டணமாக ரூ.50 லட்சத்தை அவர்கள் கேட்டுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ராஜசேகர், 1930 என்ற இணைய குற்ற உதவி எண் மூலமாக புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், குற்ற செயலுக்காக பயன்படுத்திய வங்கி கணக்கு எண்ணின் உரிமையாளர் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையிலுள்ள புதுப்பேட்டை, வடக்கு தெருவைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் வேலு (31) என்பது தெரியவந்தது.இதையடுத்து, இணையக் குற்ற காவல் ஆய்வாளர் இசைவாணி தலைûயிலான காவல் துறையினர், வேலுவை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், 2 கைப்பேசிகள், வங்கி கணக்கு புத்தகம், 6 காசோலை புத்ககம், 5 ஏடிஎம் கார்டுகள் மற்று அலுவலக முத்திரை சீல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.