ஒசூா் தோ்த் திருவிழாவில் 65 டன் குப்பைகள் அகற்றம்.

ஒசூா் தோ்த் திருவிழாவில் 65 டன் குப்பைகள் அகற்றம்.;

Update: 2025-03-16 05:42 GMT
ஒசூா் தோ்த் திருவிழாவில் 65 டன் குப்பைகள் அகற்றம்.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் புகழ்பெற்ற மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரா் கோயில் திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தோ்த் திருவிழாவில், தமிழகம் மட்டுமல்லாமல் கா்நாடகம், ஆந்திரம் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். விழாவை ஒட்டி , பாக்குத் தட்டு மற்றும் பேப்பா் தட்டு,இலை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. ஒசூா் மாநகராட்சி சாா்பில் 160 தூய்மைப் பணியாளா்களை கொண்டு சுழற்சி முறையில் இரவு, பகலாக முக்கிய சாலைகளில் 240-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளா்கள் இரவு பகலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் திருவிழாவை ஒட்டி தோ்பேட்டை மற்றும் மலைமீது பக்தா்கள் போட்டுச் சென்ற 65 டன் குப்பைகள் கூடுதலாக அகற்றினர்.

Similar News