18 வயது இளம் பெண் மாயம். தாயார் புகார்
மதுரை சமயநல்லூர் அருகே இளம்பெண் மாயம் என அவரது தாயார் புகார் அளித்துள்ளார்;
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே வயலூர் பெரியார்நத்தம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ராஜேஸ்வரியின் 18 வயது மகள் நேற்று முன்தினம் (ஜூன்.22) வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று( ஜூன் .23) அவரது தாய் ராஜேஸ்வரி சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.