
நெல்லை மாநகர காவல் ஆணையாளருக்கு 27வது வார்டு கவுன்சிலர் உலகநாதன் இன்று வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் டவுன் ஆர்ச் பகுதியில் இருந்து நெல்லை கண்ணன் சாலை வழியாக வஉசி தெருவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள்,மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வழக்கம்போல் உள்ள வழித்தடத்தில் போக்குவரத்துகளை இயக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.