ஜூன் 4ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு வருகிற 4ம் தேதி டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்களை மூடி வைக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-05-31 15:48 GMT

ஜூன் 4ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது.... வருகின்ற ஜூன் 4ம் தேதி செவ்வாய்க்கிழமை, பாராளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வருகிற 4ம் தேதி, காலை முதல் இரவு வரை, நாள் முழுவதும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும், லைசென்ஸ் பெற்ற பார்களும் மூடி வைக்க வேண்டும். விதிமுறைகளை மீறி மதுக்கடைகள் மற்றும் பார்களை திறந்தாலோ அல்லது மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News