திண்டுக்கல்லில் புகைபிடித்த 8 பேருக்கு அபராதம்
திண்டுக்கல்லில் புகைபிடித்த 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-29 15:21 GMT
அபராதம் விதித்த அதிகாரிகள்
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொது இடங்களில் புகைபிடித்த 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர் நல அலுவலர் முத்துக்குமார் மேற்பார்வையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், லோகேஸ்வரன், பிரேம்குமார், சந்தனகுமார், பிரபாகரன் ஆகியோர் கொண்ட குழு பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் புகை பிடித்த 8 பேருக்கு தலா ரூ.100 வீதம் ரூ.800 அபராதம் விதித்தனர். மேலும் புகைப்பிடிப்பதால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் குறித்து விளக்கினர்.