மீன்பிடி துறைமுகத்தில் படகில் தீ விபத்து
தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் நிறுத்தியிருந்த படகில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Update: 2024-02-28 04:18 GMT
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மாலை 4:30 மணியளவில் போட் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகில் வெல்டிங் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென படகில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.