ராமாபுரம் பகுதியில் எலக்ட்ரிகல் கடையில் தீ விபத்து

ராமாபுரம் பகுதியில் எலக்ட்ரிகல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து நாசம்.

Update: 2024-03-11 07:15 GMT

 தீ விபத்து

சென்னை ராமாபுரம் பூரப்பட்டு பகுதியில் ஸ்ரீ சாய் ஹோம் அப்ளையன்ஸ் என்ற எலக்ட்ரிகல் கடை இயங்கி வருகிறது. நேற்று இரவு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பின் கடை முழுவதும் மளமளவென எரிய ஆரம்பித்துள்ளது. அக்கம் பக்கத்தினர் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் விருகம்பாக்கம், அசோக் நகர், கிண்டி, பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய ஐந்து நிலையங்களில் இருந்து ஐந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது தீ விபத்து சம்பந்தமாக ராமாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கடையின் உரிமையாளர் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த பாவனா என்பது தெரியவந்தது. இதனையடுத்து கடை உரிமையாளரான பாவனாவுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டதன் பேரில் பாவனா கடைக்கு வந்து பார்த்தபோது கடை முழுவதும் எரிந்து நாசமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரிக்கல் பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எத்தகையத் தீங்கும் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ராமாபுரம் போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News