விருதுநகரில் மாட்டு தீவனம் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

விருதுநகரில் மாட்டு தீவனம் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

Update: 2024-03-03 10:34 GMT
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் 

விருதுநகர் லட்சுமி காலனியை சேர்ந்தவர் ரத்தீஷ் குமார் இவர் விருதுநகர் கே கே எஸ் எஸ் என் நகரில் மாட்டுத் தீவனம் தயாரிக்கும் ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் மக்காச்சோளம் பிஸ்கட் சிறுதானியம் ஜவ்வரிசி ஆகியவற்றை அரைத்து மாட்டுக்கு தீவனமாக தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆலையை நேற்று இரவு பணி முடித்து ஊழியர்கள் சென்று விட்ட நிலையில் இன்று காலையில் மாட்டு தீவனம் தயாரிக்கும் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு பணியில் இருந்த காவலாளி தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார் மேலும் தகவல் அறிந்து மாட்டு தீவனம் தயாரிக்கும் ஆலைக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆலையில் தீ மேலும் பரவாமல் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் இந்த விபத்தில் மாட்டு தீவனம் அரைக்க பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் மூலப் பொருட்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன. மேலும் இந்த தீ விபத்து குறித்து ஊரக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News