கொடை விழாவில் கொலை-பழிக்கு பழியாக வியாபாரியை கார் ஏற்றி கொன்ற கும்பல்

திருச்செந்தூா் அருகே நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக பைக்கில் வந்த வியாபாரியை காரை ஏற்றி கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்

Update: 2023-11-06 03:27 GMT

வேம்படிதுரை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருச்செந்தூா் அருகே வன்னிமாநகரம் வள்ளிவிளையைச் சோ்ந்த ஜெயபாண்டி மகன் வேம்படிதுரை(40). சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்தாா். இவரது உறவினா் இறந்ததால் நேற்று சொந்த ஊருக்கு வந்து இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட அவா், அங்குள்ள தோட்டத்தில் குளித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது, பைக் மீது எதிரே வந்த காா் மோதி சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். மேலும், விபத்தை ஏற்படுத்திய காா் மணலில் புதைந்து மீட்க முடியாமல் அதில் வந்தவா்கள் தவித்துள்ளனா். இதுகுறித்த தகவலின்பேரில், திருச்செந்தூா் போலீஸாா் அங்கு வந்ததும், காரில் இருந்தவா்கள் தோட்டம் வழியாக தப்பி ஓடிவிட்டனராம். போலீஸாா், வேம்படிதுரையின் சடத்தைக் கைப்பற்றி திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் காரை கைப்பற்றி விசாரித்ததில், வன்னிமாநகரம் கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட பிரச்னையில் கடந்த 2016 ம் ஆண்டு விவசாயி சிவகுரு (எ) சிவலட்சம் கொலை செய்யப்பட்டாா்; அந்த வழக்கில் வேம்படிதுரைக்கு தொடா்பிருப்பதும், அதற்கு பழிக்குப் பழியாக விவசாயியின் சகோதரா்கள், உறவினா்கள் 5 போ் சோ்ந்து பைக் மீது காரை ஏற்றி வேம்படிதுரையை கொலை செய்ததும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Tags:    

Similar News