தாயிடம் பேசிக் கொண்டிருந்த பெயிண்டரை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர் கைது

மயிலாடுதுறையில் தாயுடன் பேசியவரை கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-24 10:08 GMT

கொலை

மயிலாடுதுறை, கூறைநாடு ஈவேரா தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் சபரிநாதன் (46 ) இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார் .இவரது மனைவி இவரிடம் கோபித்துக் கொண்டு 15 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு குழந்தைகளுடன் வெளியூர் சென்று விட்டார். அதன் பிறகு இவர் தனியே வச்சித்து வந்தார். பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் சேகர் மனைவி பிரேமா, இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார், சிரமப்பட்டு வந்த சபரிநாதனுக்கு பிரேமா உதவி செய்து வந்துள்ளார்.

தற்பொழுது பிரேமா தனது குடும்பத்தாருடன் ஆனந்த தாண்டபுரம் சென்று வசித்து வருகிறார். அடிக்கடி பிரேமா சபரிநாதனுடன் பேசிக் கொண்டிருப்பார். இதைக்கண்ட பிரேமாவின் மகன் நடராஜன் (28) என்பவர், எப்படி என் அம்மாவிடம் அடிக்கடி பேசலாம் என்று சபரிநாதனிடம் கேட்டு வம்பு வளர்த்துள்ளார். எனக்கு உதவி செய்துள்ளார் ஆனால் பேசிக் கொண்டிருக்கிறேன் நீ தவறாக நினைக்காதே என்று கூறியுள்ளார். சம்பவ தினத்தன்று இரவு கூறைநாடுபகுதிக்கு வந்த நடராஜன் நான் பலமுறை சொல்லியும் நீ கேட்காமல் என் அம்மாவிடம் பேசுகிறாய் என்று திட்டி அடித்ததுடன் கத்தியால் வயிற்றிலும் முதுகிலும் குத்தி போட்டுவிட்டு இனிமேல் என் அம்மாவிடம் பேசுவதை பார்த்தால் உன்னை கொன்றுவேன் என்று கூறிவிட்டு ஓடிவிட்டார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சபரிநாதனை அழைத்துச் சென்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கே சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்து விட்டார். இது குறித்து மயிலாடுதுறை போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்திருந்ததை கொலை வழக்கமாக மாற்றி நடராஜனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News