வேறு இடத்தில் வேலைக்கு சென்ற தொழிலாளிக்கு அடி,உதை- 3 பேர் கைது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு போன விசைத்தறி தொழிலாளியை அடித்து, உதைத்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-11-14 04:03 GMT
காவல் நிலையம் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமாரபாளையம் உழவர் சந்தை பின்புறம் வசிப்பவர் ஒபுளிராஜ், 39. விசைத்தறி கூலி. இவர், தான் வேலை செய்த ராகு தறி பட்டறையிலிருந்து நின்று குப்புராஜ் என்ற தறி பட்டறைக்கு வேலைக்கு சென்று வருகிறார். நேற்று முன்தினம் இரவு 09:00 மணியளவில், காவேரி நகர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் ஒபுளிராஜ் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குணா, 26, சரவணன், 21, கார்த்திக், 33, ஆகிய மூவரும் இவரை வலுக்கட்டாயமாக டூவீலரில் அழைத்து சென்றனர். காவேரி நகர் புளியமரம் அருகே இறக்கி விட்டு, எதற்காக வேறு தறி பட்டறைக்கு வேலைக்கு போனாய்? என கட்டை மற்றும் கைகளால் தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த ஒபுளிராஜ், குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ஒபுளிராஜ் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுக்க, போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News