ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அ.தி.மு.க வேட்பாளர்

பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அ.தி.மு.க வேட்பாளர் ராஹா சு.தமிழ்மணி.

Update: 2024-04-05 05:22 GMT

வாக்கு சேகரிப்பு


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.அந்த வகையில் நாமக்கல் மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ரஹா சு.தமிழ்மணி வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பரமத்தி வேலூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் எஸ்.சேகர் மற்றும் அதிமுக தொண்டர்களுடன் @வாக்கு சேகரித்தார். வேலூர் பேருந்து நிலையம் பகுதியில் வாக்கு சேகரித்த போது அங்கிருந்த பயணிகள் ஆட்டோவை ஓட்டிகாட்டி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். இதை பாத்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்துடன் கை தட்டியும், ஆரத்தி எடுத்தும் வேட்பாளருக்கு வரவேற்பு அளித்தனர்
Tags:    

Similar News