பரமத்தி பேரூராட்சி பகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர் ராஹா தமிழ்மணி தீவிர வாக்கு சேகரிப்பு !
பரமத்தி பேரூராட்சி பகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர் ராஹா தமிழ்மணி தீவிர வாக்கு சேகரிப்பு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு.
Update: 2024-03-28 07:20 GMT
மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெருகிறது. இந்த நிலையில் நாமக்கல் மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ராஹா தமிழ்மணி இன்று பரமத்தி பேருராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான வீரணம்பாளையம்,மாணிக்கநத்தம்,மராபாளையம்,வெள்ளாளபாளையம்,பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பொது மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வாக்கு சேகரிப்பின் போது பரமத்தி வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர்,நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க இலக்கிய அணி செயலாளர் விஜி (எ) விஜயகுமார்,தே.மு.தி.க மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே.ராமலிங்கம், பரமத்தி நகர செயலாளர் பைக்.சுகுமார்,பரமத்தி ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.