அம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை இரண்டாம் திருவிழா அம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்து காட்சியளித்தார்.

Update: 2024-05-02 11:06 GMT
சிவகாசி:சித்திரை இரண்டாம் திருவிழா, அம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா.....

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் 2ம் நாள் நிகழ்ச்சியாக ஸ்ரீபத்திரகாளியம்மன், வெள்ளி ஊஞ்சலில் வீற்றிருந்து ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தொடர்ந்து கடைக்கோவிலில் இருந்து ஸ்ரீபத்திரகாளியம்மன் 'காமதேனு' வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை,சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News