அரக்கோணம்:தூக்குப்போட்டு பெண் தற்கொலை!
உடல் நல பாதிப்பால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-04-16 16:13 GMT
தற்கொலை
ராணிப்பேட்டை அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமன். இவர், பூக்கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி உமா (32). அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.உமா உடல் நலப்பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுபற்றி தகவல் அறிந்து வந்த அரக்கோணம் தாலுகா போலீசார் உமாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.