திண்டுக்கல்லில் இனிமேல் பேனர்கள் வைக்க அனுமதியில்லை
திண்டுக்கல் நகரில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதியில்லை என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-30 09:19 GMT
அதிகாரி
திண்டுக்கல் நகரில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதியில்லை, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல் மாநகராட்சி மாநகர திட்டமிடுநர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் ஒரு சிலர் மட்டுமே அனுமதி வாங்கி வைத்துள்ளனர், அனுமதி பெறாமல் வைத்திருக்கும் பேனர்களை அடிக்கடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகிறோம். இருந்தபோதிலும் ஒருசிலர் சட்டத்தை மீறுகின்றனர். அவர்கள் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பல பகுதிகளில் பேனர்களால் விபத்துகள் ஏற்படுவதால் திண்டுக்கல் நகரில் இனிமேல் பேனர்கள் வைக்க அனுமதியில்லை. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாநகராட்சி மாநகர திட்டமிடுநர் ஜெயக்குமார் தெரிவித்தார்.