நாராயண குப்பத்தில் சுடுகாட்டில் எரிமேடை அமைக்க பூமி பூஜை

நாராயண குப்பம் கிராமத்தில் சுடுகாட்டில் எரிமேடை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

Update: 2024-07-02 14:12 GMT

எரிமேடை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் வாங்கூர் ஊராட்சி நாராயணகுப்பம் கிராமத்தில் பல ஆண்டுகளாக சுடுகாடு இல்லாமல் இருந்தது. தற்போது வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர், அம்சவேணி பெரியசாமி, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுடுகாட்டுக்கு இடத்தை ஏற்பாடு செய்து ஒதுக்கி உள்ளார்.

அதோடு அங்கு எரிமேடை அமைக்கவும் அவர் ஏற்பாடு செய்தார். அதைத்தொடர்ந்து புதிதாக சுடுகாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் எரி மேடை கட்டுவதற்கு பூமிபூஜை நிகழ்ச்சி நடந்தது.

ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார். அவருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News