மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி தவறி விழுந்து பலி

பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2024-03-05 08:16 GMT

சாலை விபத்து 

பாபநாசம் அருகே திருவையாதுக்குடி காலணி தெருவில் வசித்து வந்தவர் சிவலிங்கம். (65 )விவசாயி. சம்பவத்தன்று இவர் பாபநாசம் வந்துவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது பாபநாசம் தனியார் கல்லூரி அருகே சென்றபோது. சிவலிங்கம் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி விழுந்து விட்டார். இதனால் தலையில் பலத்த அடிபட்டு சிவலிங்கம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது குறித்து அவரது மனைவி செல்வி (வயது50) கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News