பாஜக தேர்தல் அறிக்கை - பொதுமக்களிடம் கருத்து கேட்பு

பாபநாசத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது .

Update: 2024-03-15 04:21 GMT

கோரிக்கை மனுக்களை பெற்ற பாஜகவினர் 

வளர்ச்சி அடைந்த பாரதம் மோடியின் உத்தரவாதம் வளர்ச்சி அடைந்த பாரதம் எனும் லட்சியத்தை அடைய பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு உங்களின் நேரடி ஆலோசனைகளை அனுப்பலாம். மீண்டும் ஒருமுறை மோடி அரசு உங்கள் ஆலோசனை எங்கள் தீர்மானம் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு உங்கள் பேனாவின் மூலம் எங்களுக்கு ஆலோசனைகளை வழங்குங்கள் என்ற திட்டத்தின் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை வாங்குவதற்கான பெட்டி வைக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டது .

தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை வைத்து கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெறும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் வாசுதேவன் மாவட்ட துணைத் தலைவர் வேதா செல்வம் முன்னாள் மாவட்ட தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வைத்தனர் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர்கள் வி. ஆர். செல்வம் ,செந்தில்குமார், தெய்வக்குமார் ,நவநீதம், ஜெகன்நாத், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் சண்முகம் கிழக்கு ஒன்றிய பொது செயலாளர் சாமிநாதன் வழக்கறிஞர் பிரிவு பார்வையாளர் சுரேஷ்குமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபு பாபநாசம் நகர தலைவர் மணிகண்டன் அரசு தொடர்பு பிரிவு ஒன்றிய தலைவர் திருஞானம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

Tags:    

Similar News