பாலம் கட்டுவதை தடுத்த பாஜக பிரமுகர் கைது

பாலம் கட்டுவதை தடுத்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-11-27 12:06 GMT

கோப்பு படம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே ஒப்பந்ததாரருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆத்தூர் ஒன்றிய பாஜக தலைவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியில் ரூ.44 லட்சத்தில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை ஒப்பந்ததாரர் திருப்பதி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஆத்தூர் ஒன்றிய பாஜக தலைவரான அய்யம்பாளையத்தை சேர்ந்த அய்யனவேல் பாலம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு சென்று பாலம் கட்டக்கூடாது என்று தகராறு ஈடுபட்டார். மேலும் அவர் ஒப்பந்தக்காரர் திருப்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் அய்யனவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News