சேலத்தில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கருப்பு பட்டை

சேலத்தில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கருப்பு பட்டை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-07-02 09:18 GMT

பாராட்டு சான்றிதழ் வழங்கல் 

சேலம் இரும்பாலை மெயின் ரோடு சித்தனூர் சோயுகாய் கராத்தே மாணவ- மாணவிகளுக்கு கருப்பு பட்டை வழங்கும் நிகழ்ச்சி சேலத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக வக்கீல்கள் பிரபாகர், சந்தோஷ், சிலம்ப பயிற்சியாளர்கள் சேகர், ஹேமண்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கராத்தே பயிற்சியாளர் சண்முகம், செண்பகராஜ் மாணவ- மாணவிகளுக்கு கருப்பு பட்டை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். கருப்பு பட்டை பெற்ற மாணவ- மாணவிகளை தமிழ்நாடு மாநில கராத்தே சங்க செயலாளர் அல்தாப் ஆலம் பாராட்டினார்.

Tags:    

Similar News