மது பாட்டில் கடத்தியவர் கைது
தென்காசி மாவட்டம், சிவகிரியில் மது பாட்டில் கடத்தியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Update: 2024-05-15 06:01 GMT
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி பகுதியில் மது பாட்டில் கடத்தி செல்வதாக அந்த ரகசிய தகவலை கிடைத்ததாக சிவகிரி போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது விஸ்வநாத பேரி சேர்ந்த ரகுபதி (40) என்பவர் 60 மது பாட்டில்களை கொண்டு வந்தது தெரியவந்தது. மோட்டார் சைக்கிள் உடன் ரகுபதி போலீசை கண்டு தப்பி ஓட முயன்றால் அப்போது சிவகிரி போலீசார் அவரை வளைத்து பிடித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு ரகுபதி கைது செய்து மது பாட்டில் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.