கோவிலின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு !

திருப்பத்தூர் அருகே கோவிலின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு - போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-03-06 04:38 GMT

காவல் நிலையம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே மருதங்குடியில் ஆதினமிளகி அய்யனார் கோயில் உள்ளது. இக்கோவிலின் பூசாரி கருப்பையா கோயிலுக்கு சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது உள்ளே சென்று பார்த்த அவர், மடப்பள்ளி அறையில் இருந்த 5 வெள்ளி அங்கிகள், 9 வெள்ளி அரிவாள்கள் திருட்டு போயிருந்ததை அறிந்தார். அதன் மதிப்பு ரூ.2 லட்சமாகும். இதுகுறித்து பூசாரி கருப்பையா அளித்த புகாரின்பேரில், நாச்சியார்புரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News