நெமிலி அருகே கால்வாய்க்குள் பாய்ந்த கார்: உயிர் தப்பிய இருவர்

நெமிலி அருகே சாலையில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-29 11:14 GMT

கால்வாய்க்குள் பாய்ந்த கார்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (43). காஞ்சீபுரத்தில் உள்ள வேளாண்மை மருந்து விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவர் தன்னுடைய காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அவருடன் சந்திரசேகர் (55) என்பவரும் காரில் சென்றார். நெமிலியை அடுத்த அசநெல்லிகுப்பத்தில் இருந்து கீழ்வெங்கடாபுரம் செல்லும் சாலையில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் தடுப்புகள் இல்லாததால் அருகில் உள்ள கால்வாயில் பாய்ந்தது. இதில் கார் முழுவதும் சேதமடைந்தது.

இதைபார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் காரில் சிக்கியிருந்த சரவணன் மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவரையும் மீட்டனர். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News