மரக்காணம்: பேரறிஞர் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவினர் அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Update: 2024-02-03 10:47 GMT

அண்ணா நினைவுதினம்

பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் வழிகாட்டுதலோடு மரக்காணம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் மரக்காணம் அடுத்த வேப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து முருக்கேரி பேருந்து நிலையம் வரை திமுகவினர் அமைதி ஊர்வலமாக சென்று அண்ணாவின் திருவுரு படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்,

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், ஒன்றிய அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், கிளைக் கழக செயலாளர் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News