தலைமையாசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

களத்தூர் ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப்பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா.

Update: 2024-04-24 11:29 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், களத்தூர் ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப்பள்ளி வளாகத்தில், தலைமையாசிரியர் க.கணேசனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா, ஊராட்சி மன்றத் தலைவர் தி.மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.  ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பி.பெரியநாயகி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கே.முருகன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி த.சத்யப்ரியா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரா.சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பணி ஓய்வு பெறும் தலைமையாசிரியர்  க.கணேசன் ஏற்புரையாற்றுகையில், தன்னுடைய பணிக்காலத்தில் ஒத்துழைப்பு நல்கிய உயர் அலுவலர்கள், சக ஆசிரியர்கள், பெற்றோர்கள், கிராமத்தினர் மாணவ, மாணவிகள் ஆகியோரை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்து பேசினார்.  முன்னதாக பள்ளி மேலாண்மைக் குழு ஆசிரியை வி.அனுசுயா வரவேற்றார். நிறைவாக ஆசிரியர் பயிற்றுநர் அ.ரா.சரவணன் நன்றி கூறினார். இதில், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News