பாஜக சார்பில் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தலைப்பில் கருத்து கேட்பு பெட்டி !

பாஜக சார்பில் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தலைப்பில் கருத்து கேட்பு பெட்டி வைக்கப்பட்டு பொது மக்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டது.

Update: 2024-03-15 07:42 GMT
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதி மக்களின் குறைகள் மற்றும் ஆலோசனைகளை கேட்பதற்கு பாஜக சார்பில் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தலைப்பில் கருத்து கேட்பு பெட்டி வைக்கப்பட்டு பொது மக்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டது.   நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் பொதுமக்களிடம் தொகுதி வாரியாக ஆலோசனை கேட்கும் நிகழ்வு நடைபெற்றது வருகிறது.  இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட பாஜக சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிக்குட்பட்ட பொதுமக்களிடம் தொகுதியில் உள்ள குறைகள் மற்றும் மக்களின் ஆலோசனைகளை பெறுவதற்காக வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தலைப்பில் தொகுதிவாரியாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.  தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் பாஜக தேனி மாவட்ட தலைவர் பிசி பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.  பொதுமக்களிடம் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு அதில் அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு பாஜக சார்பில் வைக்கப்பட்டுள்ள கருத்து கேட்கும் பெட்டியில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை செலுத்தினர்.
Tags:    

Similar News