வள்ளலார் சர்வதேச மையம் சம்மந்தமான கலந்தாய்வு கூட்டம்
கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் குறித்து நடைப்பெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.;
Update: 2024-04-24 02:22 GMT
கலந்தாலோசனை கூட்டம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நகர் சத்திய ஞான சபை திடலில் வள்ளலார் சர்வதேச மையம் சம்மந்தமான கலந்தாய்வு கூட்டம் வடலூர் நகராட்சி அண்ணா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் நகர்மன்ற தலைவர், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.