கெங்கையம்மன் கோவிலில் ஏசிஎஸ் சாமி தரிசனம்

குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் உதயநிதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2024-05-16 15:51 GMT

சாமி தரிசனம் செய்த சண்முகம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த புகழ்பெற்ற கெங்கை அம்மன் ஆலயம் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே பூ பல்லுக்கு ஊர்வலம் நடைபெறுகிறது.

இதனிடையே புதிய நீதி கட்சி தலைவரும் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருமான ஏ.சி. சண்முகம் குடியாத்தம் கெங்கை அம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க சீர்வரிசையுடன் கோயிலுக்கு வந்து கெங்கை அம்மனை தரிசனம் செய்தார்.அப்பொழுது கோவில் நிர்வாகம் சார்பாக அவருக்கு தாமரை மாலை அணிவிக்கப்பட்டு கோவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News