சிறுவாபுரி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தை மாத முதல் செவ்வாய்க்கிழமை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.

Update: 2024-01-17 01:37 GMT

பக்தர்கள் கூட்டம் 

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6.வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.

தை மாத முதல் செவ்வாய்க்கிழமை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். பொது தரிசனம்,50 ரூபாய்,100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவிலுக்கு வெளியே வெயிலில் நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

புதிய வீடு கட்ட வேண்டும்,திருமண தடை நீங்க வேண்டும், அரசியல்,ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே விஐபி தரிசனம் எனக்கூறி பொதுமக்களிடையே இடைத்தார்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் ஆலயத்தின் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராத காரணத்தினால் முதியோர்கள், குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு தரப்பு பக்தர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.

Tags:    

Similar News