பாஜ.,வில் இணைந்த திமுக, அதிமுக பிரமுகர்கள்

தென்காசியில் திமுக, அதிமுக பிரமுகர்கள் பலரும் பாஜ., இணைந்தனர்.

Update: 2024-03-04 02:58 GMT

தென்காசியில் திமுக, அதிமுக பிரமுகர்கள் பலரும் பாஜ., இணைந்தனர். 

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாப்பாக்குடி ஒன்றியம் இடைகால் ஊராட்சி மன்ற தலைவி திமுகவைச் சேர்ந்த பிரியதர்ஷினி மற்றும் அதிமுகவை சேர்ந்த இடைகால் ஊராட்சி மன்ற 8வது வார்டு உறுப்பினர் செல்லத்துரை யும் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா முன்னிலையில் நேற்று தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர். புதிதாக கட்சியில் இனைந்தவர்களுக்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா சால்வை அணிவித்து உறுப்பினர் கார்டுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருநெல் வேலி பாராளுமன்ற பொறுப்பாளர் அன்புராஜ், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மாவட்ட பொதுச் செயலா ளர் அருள்செல்வன், மாவட்ட பொதுச்செயலா ளர் ராமநாதன், பாப்பாக்குடி ஒன்றிய தலைவர் முருகன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் குத்தா லிங்கம், தென்காசி நகர தலைவர் மந்திர மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், இடைகால் கிளைத் தலைவர் முத்துக்குமார், அரசு தொடர்பு பிரிவு ஒன்றிய தலைவர் நயினார், ஒன்றிய வர்த்தக பிரிவு தலைவர் ஐயப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News