டூவீலர் விபத்தில் டிரைவர் பலி
ஆயக்குடி அருகே சாலை தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் லாரி டிரைவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.;
Update: 2023-12-25 03:49 GMT
உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள இந்திரா காலனியை சேர்ந்தவர் சேது பூபதி (60). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது டூவீலரில் செம்பட்டியில் இருந்து உடுமலைப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ரூக்குவார்பட்டி அருகே டூவீலர் நிலைதடுமாறி சாலையின் தடுப்பில் மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த பூபதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆயக்குடி போலீசார் பூபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.