திண்டிவனம் அருகே கார் மோதி மூதாட்டி இறப்பு

Update: 2023-12-19 06:59 GMT

பைல் படம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த அய்யந்தோப்பு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் துளசி மனைவி காளியம்மாள்(வயது 70). இவர் நேற்று மாலை மேய்ச்சலில் இருந்த மாடுகளை ஓட்டிக்கொண்டு கல்லூரி சாலையை கடந்து வீட்டிற்கு செல்ல முயன்றார். அப்போது திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் மூதாட்டி மீது மோதியது. இதில் படு காயமடைந்த அவர் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News