ஈரோடு மாநகராட்சியின் அவசர கூட்டம்: அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

ஈரோடு மாநகராட்சியின் அவசர கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2023-12-15 16:38 GMT

வெளியேறிய கவுன்சிலர்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஈரோடு மாநகராட்சியின் அவசர மாமன்ற கூட்டம் மாநகராட்சி கூட்டறங்கில் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள கனி மார்க்கெட் ஜவுளி வளாகத்தில் உள்ள கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக தான் அவசர கூட்டம் நடைபெற்றது

இந்த நிலையில் இன்று கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவில் அதிமுக கவுன்சிலர்களை சேர்க்காதத்தை கண்டித்தும் கடைகள் முழுமையாக ஜவுளி வியாபாரிகளுக்கு வழங்க வலியுறுத்தியும் மாநகராட்சி அவசர மாமன்ற கூட்டத்தில் இருந்து மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து தலைமையில் அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Tags:    

Similar News