விவசாயி தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம், குருவிக்கொண்டான்பட்டியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-05-25 08:18 GMT
தற்கொலை
குருவிக்கொண்டான்பட்டியை சேர்ந்தவர் கல்யாணி(55). விவசாயி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவர் கல்யாணி கண்டித்தார். ஆனால், லட்சுமி கேட்காததால் மனமுடைந்த கல்யாணி விஷம் குடித்தார்.
மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கல்யாணி உயிரிழந்தார். இதுகுறித்து பனையப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.