தனியார் நிறுவனத்தில் தீ விபத்து - பொருட்கள் எரிந்து சேதம்

சென்னை பாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கணினி , ஆவணங்கள் ஏசி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது.

Update: 2024-01-31 10:57 GMT
சென்னை பாடியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மாலை 3 மணி அளவில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீயினால் அலுவலகம் முழுவதும் தீ பரவியது.இதனால் அந்த அலுவலகத்தில் இருந்த கணினிகள், ஏசி மற்றும் ஆவணங்கள் தீயில் கருகி நாசமாகின. தீயணைப்பு துறையினர் 2 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு தீயை அணைத்தனர்.
Tags:    

Similar News