ஊத்தங்கரை அருகே தீ விபத்து - ரூ.50 ஆயிரம் மதிப்பிலான அறைகலன்கள் எரிந்து சேதம்

ஊத்தங்கரை அருகே வீட்டின் மேல் கூரையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

Update: 2023-10-24 01:10 GMT

தீயை அணைக்கும் தீயணைப்பு துறையினர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை பகுதியை சேர்ந்தவர் பிரபு, இன்ஜினியர் உள்ளார். .இவரது வீட்டின் மேல்தளம் புற்களால் மேயப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஆயுத பூஜை என்பதால் அருகிலுள்ள வீட்டினை சுத்தம் செய்து குப்பைகளை வெளியே கொட்டி எரித்துள்ளனர்.அப்போது மேற்கூறையின் மீது தீப்பொறி பட்டுத் தீ மளமளவென பரவியது. இதனால் வீட்டின் உட்பகுதியில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது. அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அனைத்தனர்.இதில் வீட்டில் இருந்த உபகரணங்கள் தீயில் எரிந்து சேதமானது.இதன் மதிப்பு சுமார் ரூ.50,000 ஆகும். இந்தசம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News