பேப்பர் குடோனில் தீ விபத்து - இயந்திரங்கள், பொருட்கள் சேதம்

சேலம் மல்லமூப்பம்பட்டி பகுதியில் உள்ள பேப்பர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் குடோனில் பொருட்கள் மற்றும் எந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.சேதமதிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-01-11 13:30 GMT

தீ விபத்து 

சேலம் சூரமங்கலம் சோளம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சிவகணேஷ் ( 46). இவர் மல்லமூப்பம்பட்டி பகுதியில் பேப்பர் தயார் செய்யும் நிறுவனம் மற்றும் குடோன் வைத்துள்ளார். சம்பவத்தன்று ஊழியர்கள் வேலை முடிந்த பின்னர் குடோனை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். மறுநாள் அதிகாலை குடோனில் இருந்து கரும்பு புகை வந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் சிவகணேசனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் விரைந்து வந்து குடோனை திறந்து பார்த்தார். அப்போது குடோனில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து அவர் சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் குடோனில் இருந்த பொருட்கள் மற்றும் எந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த தீவிபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மின் கசிவு காரணமாக குடோனில் தீப்பிடித்தது தெரியவந்தது. சேதமதிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News