மாஜி மருத்துவ ஊழியர்கள் காஞ்சிபுரத்தில் சங்கமம்

காஞ்சிபுரத்தில் மாஜி மருத்துவ ஊழியர்களின் 16வது சங்கமத்தில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-03-18 06:47 GMT

மாஜி மருத்துவ ஊழியர்கள் காஞ்சிபுரத்தில் சங்கமம்

தமிழ்நாடு மருத்துவ துறையில், பல நிலைகளில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர்கள், 2016 முதல், ஆண்டுதோறும், 'உறவாடும் உள்ளங்கள்' என்ற பெயரில், தமிழகத்தில் உள்ள எட்டு மண்டலங்களில் சங்கமிப்பு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அதன்படி, 16வது சங்கமிப்பு நிகழ்ச்சி, காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் தலைமை வகித்தார்.

மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் ராமசாமி, சீதாராமன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என, சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 165 பேர் பங்கேற்றனர். இதில், பணி காலத்தில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளையும், பணி ஓய்வுக்குப் பின் தங்களது வாழ்க்கை முறை, குடும்ப சூழல் குறித்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் காளத்தி, அண்ணாமலை ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News