குமாரபாளையம் சாலை விபத்தில் நால்வர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
குமாரபாளையம் சாலை குப்பாண்டபாளையம் என்ற பகுதியில் பனை மரத்தின் மீது கார் மோதி நால்வர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.;
விபத்தில் சிக்கிய கார்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சீராம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சொகுசு காரில் வந்துள்ளனர்.
இளைஞர்கள் ஓட்டி வந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் குமாரபாளையம் அருகே உள்ள குப்பாண்டபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது மோதியதில் காரில் பயணம் செய்த தனசேகரன்,
லோகேஷ், சிவக்குமார், மற்றும் கவின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் ஸ்ரீதர் என்ற இளைஞர் மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்... இது குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம்
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த, திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டார்.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.. அங்கு இறந்து போனவர்களின் உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.