ராட்சத எந்திரத்தில் ரூ.3½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு

திருவெண்ணெய்நல்லூர் அருகே தார் மிக்சிங் பிளான்ட் நிறுவனத்திற்கு சொந்தமான இயந்திரத்தில் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-05-10 08:17 GMT

பொருட்கள் திருடப்பட்ட இயந்திரம் 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காந்தலவாடி கிராமத்தில் தார் சாலை போடுவதற்காக தார் மிக்சிங் பிளான்ட் நிறுவனம் செயல் பட உள்ளது. இதற்காக ராட்சத எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த எந்திரத்தில் இருந்த 9 மோட்டார் கள், ஒரு வாட்டர் பம்ப், 850 மீட்டர் கேபிள் ஒயர், பிளேட்டு லீக்ஸ் உள்ளிட்ட ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிந் தது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் ஓவியன் கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்திவருகிறார்.
Tags:    

Similar News