நாய்கள் துரத்திய புள்ளிமானை மீட்ட விவசாயிகள்!

சோளிங்கர் அருகே நாய்கள் துரத்திய புள்ளி மானை விவசாயிகள் மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Update: 2024-05-09 13:12 GMT

புள்ளிமான்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட போளிப்பாக்கம் மதுரா பிள்ளையார் குப்பம் கிராமத்தை சேர்ந்த காண்டீபன் என்பவரது பூந்தோட்டத்துக்கு, பாணாவரம் வனப்பகுதியில் இருந்து புள்ளி மான் குட்டி ஒன்று தண்ணீர்தேடி வந்துள்ளது.

இந்த மான் குட்டியை நாய்கள் விரட்டி உள்ளன. இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் நாய்களை விரட்டி புள்ளிமான் குட்டியை உயிருடன் மீட்டனர். பின்னர் இது குறித்து பாணாவரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த வனத்துறையினர் மான் குட்டியை மீட்டு, வனப்பகுதியில் விட்டனர்.அப்போது போளிப்பாக்கம் கிரம நிர்வாக அலுவலர் ராஜகோபால் உடனிருந்தார்.

Tags:    

Similar News