கனமழை : நீலகிரியில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
Update: 2023-11-09 03:43 GMT
கனமழை
நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருவதுடன் கடும் குளிர் நிலவுகிறது. இந்த கனமழை காரணமாக உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா உள்ளிட்ட 4 தாலுக்காவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். மேலும் மழை பெய்து வருவதால் மலைப்பாதையில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்தால் உடனடியாக அப்புறப்படுத்த துறை சார்ந்த அதிகாரிகள் பணியில் தயார் நிலையில் உள்ளனர்.