கள்ளக்குறிச்சி அருகே வீடு எரிந்து சேதம்

கள்ளக்குறிச்சி அருகே வீடு எரிந்து சேதம் அடைந்தது.

Update: 2024-02-29 09:33 GMT

சேதமடைந்த வீடு

 கள்ளக்குறிச்சி, ராமச்சந்திரா நகரை சேர்ந்தவர் குழந்தைவேல் மகன் மகேந்திரன். நேற்று முன்தினம் மாலை இவரது வீட்டில் துணிகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்த அறை மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்தது. புகை வந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் வீட்டினை கதவை உடைத்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

அந்த அறையில் பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இது தொடர்பாக மகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News