குமரி 4 வழிச்சாலை திட்டம் பாஜக அரசின் சாதனை அல்ல - எம்.பி  அறிக்கை

குமரி 4 வழிச்சாலை திட்டம் பாஜக அரசின் சாதனை அல்ல, கிடப்பில் போடப்பட்ட இத்திட்டத்தை மேற்கொள்ள நான் முயற்சி மேற்கொண்ட நேரத்தில் இங்குள்ள பாரதிய ஜனதா கட்சியினர் இந்த திட்டத்தை மீண்டும் தொடங்க விடாமல் முட்டு கட்டை போட முயற்சி செய்தனர். இதற்கான பதிலை குமரி மக்கள் தேர்தல் நாளன்று அளிப்பார்கள் என விஜய் வசந்த் எம்.பி தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-17 07:29 GMT

விஜய் வசந்த் எம்.பி

கன்னியாகுமாரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது - நான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற நேரத்தில் நான்கு வழி சாலை பணிகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல், மண் எடுப்பதற்கு பசுமை தீர்ப்பாயம் தடை விதித்த காரணத்தால் இந்த பணிகளை முன்னே எடுத்து செல்ல இயலவில்லை.ஆகவே 2021 ஆம் ஆண்டு இறுதியில் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தை முடித்து கொண்டது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு.

இந்த திட்டத்தை மீண்டும் துவங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் மேற்கொண்ட முயற்சிகள் பல.      டெல்லியில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை பல முறை சந்தித்து இந்த நான்கு வழி சாலையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து கைவிடப்பட்ட இந்த திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என வலியுறுத்தினேன்.   

இந்த திட்டத்தை மீண்டும் தொடங்க கல், மண் பக்கத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து கொண்டு வர மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும் என கூறப்பட்டது. இந்த தேவைக்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும் இந்த திட்டத்திற்கு தேவையான அதிக நிதியான 1041 கோடி ரூபாயும் மத்திய அரசிடம் போராடி பெற்று தந்தேன். மறு ஒப்பந்தம் விரைவில் போட வேண்டும் என நெடுஞ்சாலை துறையை வலியுறுத்தி ஒப்பந்தம் இறுதி ஆகும் வரை இதற்காக அவராது உழைத்தேன். குமரி மக்களுக்காக இந்த போராட்டங்களை நான் மேற்கொண்ட அதே நேரத்தில் இங்குள்ள பாரதிய ஜனதா கட்சியினர் இந்த திட்டத்தை மீண்டும் தொடங்க விடாமல் முட்டு கட்டை போட முயற்சி செய்தனர்.  இதற்கான பதிலை குமரி மக்கள் தேர்தல் நாளன்று அளிப்பார்கள்' என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News

Test