தொழிலில் நஷ்டம்-விரக்தியில் தொழிலதிபர் தற்கொலை!
தொழிலில் நஷ்டம் ,பலரிடம் கடன் வாங்கிய நிலையில் தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-09 12:23 GMT
தற்கொலை
கோவை: மணியகாரம்பாளையம் பாலமுருகன் நகரை சேர்ந்தவர் சதீஷ்(43).அதே பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தொழில் அபிவிருத்திக்காக பலரிடம் கடன் வாங்கிய நிலையில் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்ட அவர் சம்பவத்தன்று வீட்டின் கழிவறையில் இருந்த அமிலத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.