தேர்தல் செலவினங்கள் குறித்து ஆய்வு கூட்டம் !

தமிழ்நாடு சிறப்பு செலவின பார்வையாளர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் தேர்தல் செலவினங்கள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-11 12:36 GMT

ஆய்வு கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024-னை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தலைமையில் தமிழ்நாடு சிறப்பு செலவின பார்வையாளர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் தேர்தல் செலவினங்கள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் செலவின பார்வையாளர்கள் டபாஸ் லோத் மற்றும் பிரமானந்த் பிரசாத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ம. இராஜசேகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் இரா. சரண்யா ஆகியோர் உள்ளனர்.
Tags:    

Similar News